பட்டறைபெரும்புதூரில் அகழ்வாராய்ச்சி : கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிப்பு
2016-07-05@ 01:33:56

சென்னை: திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூரில் தொல்பொருள் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 38 இடங்களில் தமிழக அரசு தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் பொருட்களை அருகில் உள்ள அகழ் வைப்பகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இவ்வாண்டு திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூரில் தொல்பொருள் துறை இயக்குனர் டி.கார்த்திகேயன், துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், களப்பணியாளர்கள் ஜெ.பாஸ்கர், ரஞ்சித், பாஸ்கர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்தனர். ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய பகுதிகளில் மொத்தம் 12 அகழாய்வு குழிகள் இருந்தன.
ஆய்வில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள், உலோக காலத்தை சேர்ந்த மட்பாண்டங்களான சிவப்பு மட்கலன்கள், மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள், இரும்பு பொருட்கள், கல்மணிகள், செம்பு பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், யானை தந்தத்தாலான கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன மணிகள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வரலாற்று தொடக்க காலத்தை பதிவு செய்யும் தமிழ்பிராமி எழுத்து கொண்ட பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள், துளையிடப்பட்ட கூரை ஓடுகள் போன்ற 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த ஆய்வில் இவ்வூரில் கற்காலம் முதல் தற்காலம் வரை மனிதர்கள் இங்கு தொடர்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளதை மண்ணடுக்குகளின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தொல்பொருட்கள் அனைத்தும், பட்டறைபெரும்புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களின் பார்வைக்கு நேற்று வைக்கப்பட்டது. இதை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
குடும்ப தகராறில் பேராசிரியர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிப்பறைகள் சீரமைப்பு: முதன்மை அதிகாரி நடவடிக்கை
லாரி மோதியதில் மாணவன் பலி 3 பேர் படுகாயம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!