குரூப் 1, 4 மற்றும் 2, 2ஏ உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி 14 தேர்வுகளின் முடிவு எப்போது வெளியாகும்?
2023-03-19@ 00:56:02

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,446 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி முதன்மை தேர்வு நடந்தது. அதற்கான தேர்வு முடிவு வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். குரூப் 4 பதவிகளில் வரும் 7,301 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு மாத இறுதிக்குள் வெளியாகும். குரூப்-1 பதவிகளில் இருக்கும் 95 காலி இடங்களுக்கு 2022ம் ஆண்டு நடந்த முதல்நிலைத் தேர்வு முடிவு ஏப்ரலில் வெளியாகும். 731 கால்நடை உதவி மருத்துவர் தேர்வுக்கான முடிவு மே மாதம் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவை துறையில் வரும் 217 பணியிடங்கள், மீன்வளத்துறையில் 64 இன்ஸ்பெக்டர்கள், 24 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்.
தமிழ்நாடு சுகாதார சேவைத்துறையின் கீழ் வரும் 12 சுகாதார அதிகாரி பணியிடம், 8 ஜெயிலர் பணியிடங்கள், 10 வனப்பயிற்சியாளர்களுக்கு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும். சில பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மே மாதத்திலும் வெளியிடப்படும். தேர்வு முடிவு அட்டவணையை போலவே, காலிப் பணியிடங்கள் குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்தாண்டுக்கான ஓர் ஆண்டு அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி புதுப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி ஜெயிலர் பணியிடத்தில் காலியாக உள்ள 59 பணியிடத்துக்கு அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும்.
23 உதவி சுற்றுலா அதிகாரி(கிரேடு-2) காலி இடத்துக்கு அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும். தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகத்தில் 14 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். 194 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் மாதத்தில் நடைபெறும்.
384 ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணி இடங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடக்கும். எவ்வளவு காலி பணியிடம் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இதே போல மொத்தம் 29 வகையான பணியிடங்கள் குறித்த விவரத்தை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்