ஆன்லைன் சூதாட்டம், கடன் சேவை 232 சீன ஆப்களுக்கு ஒன்றிய அரசு தடை
2023-02-06@ 01:10:50

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம், அங்கீகரிக்கப்படாத கடன் சேவைகளை அளித்து வந்த சீனா உள்ளிட்ட வௌிநாட்டு நிறுவனங்களின் 232 செயலிகளுக்கு ஒன்றிய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோல், எளிய வழிகளில் கடன் தரும் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத வௌிநாட்டு கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று அதனை திருப்பி தர முடியாமல் பல்வேறு பிரச்னைளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
சீனா உள்ளிட்ட வௌிநாட்டு செயலிகள் வாயிலாக இந்தியர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் திருடப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற செயலிகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சீனாவுடன் தொடர்புடைய 288 செயலிகளை ஒன்றிய அரசு ஆய்வு செய்ய தொடங்கியது. இந்த ஆய்வில் இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்களை சீனா உள்ளிட்ட வௌிநாடுகள் திருடி இருக்கலாம் என்று தெரிய வந்ததையடுத்து, இந்த செயலிகளை தடுக்க முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, சீனா மற்றும் வெளிநாடுகளுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள், அங்கீகரிக்கப்படாத கடன் சேவை அளித்து வந்த 94 கடன் வழங்கும் செயலிகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட செயலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.
மேலும் செய்திகள்
மோடி குறித்த மற்றொரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராக ராகுலுக்கு சம்மன்: பாட்னா நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!