போலீசார் இரவு நேர ரோந்து பணியால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்தது: பயணிகள் வரவேற்பு
2023-01-31@ 01:33:38

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக 24 மணி நேரமும் இந்த பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்படும். மேலும் பஸ் கிடைக்காதவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பினரும் இரவு நேரத்தில் இந்த பேருந்து நிலையத்தில் தூங்குவது வழக்கம்.
இவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரவுடிகளும் ரகளை செய்து வந்தனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் மது குடித்துவிட்டு மதுபாட்டிகளை அங்கேயே போட்டு உடைப்பது, பயணிகளை மிரட்டி பணம் பறிப்பது போன்றவற்றால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். இப்பிரச்னைக்கு தீர்வாக, சி.எம்.டி.ஏ செயற் பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் ஒரு குழுவினர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களுடன் கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீசாரும் கடந்த 11 நாட்களுக்கு மேலாக இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பேருந்து நிலையத்தில் தூங்கிய வெளியாட்களை எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து 11 நாட்களாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் வழிப்பறி, செல்போன், செயின் பறிப்பு, பிக்பாக்கெட், ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா போதை கும்பல் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த ரோந்து பணியில் ஈடுபடுவோம்,’’ என்றனர். பயணிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசாரின் இரவு ரோந்து பணியால் குற்றச் சம்பவங்கள் குறைந்து உள்ளது. இரவு நேரங்களில் பேருந்து நிலையம் சுத்தமாக உள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக போலீசாருக்கும், சிஎம்டிஏ அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். போலீசார், இரவு ரோந்து பணியை தொடர வேண்டும்,’’ என்றனர்.
மேலும் செய்திகள்
மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுநர்களுக்கு பணியிட ஆணைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!
போலி செய்திகள் மற்றும் வெறுப்பு செய்திகளை கண்டறிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்.!
அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடியை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து வசூலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஜூன் 28ல் குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
தருமபுரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!