சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
2023-01-29@ 10:30:00

கோபால்பட்டி: சாணார்பட்டி பகுதியில் மாமரங்களில் மாம்பூக்கள் அதிகம் பூத்துள்ளதால் இந்த ஆண்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சிஓடைபட்டி, ஐயாபட்டி, கொரசனம்பட்டி, மணியக்காரன்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முக்கனிகளில் ஒன்றான மாங்கனி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு உயர்ந்த வகை மாம்பழங்களான இமாம் பசந்த் அல்போன்சா, பங்கனப்பள்ளி போன்ற ரகங்களும் கிரேப், செந்தூரம் போன்ற ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்பட்டு மாம்பழங்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன, இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் நல்ல வெயிலும் அடித்து வருகிறது. இதனால் மாமரங்களில் மாம்பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. மாம்பூக்கள் அதிகம் பூத்துள்ளதால் இந்த ஆண்டு, சென்ற ஆண்டை காட்டிலும் அதிகளவு மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
மேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்