SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க வாழ் இந்தியர் சுட்டுக் கொலை: மனைவி, மகள் கவலைக்கிடம்

2023-01-26@ 00:03:10

நியூயார்க்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் தோரோக்பர்ட் பகுதியில் இந்தியரான பீனல் படேல்(57) அவரது மனைவி  ரூபல்பென் படேல், மகள் பக்டி படேல் ஆகியோருடன் வசித்த வந்தார். கடந்த 20ம் தேதி இவர்கள் மூவரும் வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பீனல் படேல் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும்  ரூபல்பென் படேல், பக்டி படேல் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் வேறொரு நபருடன் தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என போலீசார் கூறினர். கடந்த ஞாயிற்றுகிழமை, 23 வயது  அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் கொள்ளை கும்பலால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலால் இந்தியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்