அமெரிக்க வாழ் இந்தியர் சுட்டுக் கொலை: மனைவி, மகள் கவலைக்கிடம்
2023-01-26@ 00:03:10

நியூயார்க்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் தோரோக்பர்ட் பகுதியில் இந்தியரான பீனல் படேல்(57) அவரது மனைவி ரூபல்பென் படேல், மகள் பக்டி படேல் ஆகியோருடன் வசித்த வந்தார். கடந்த 20ம் தேதி இவர்கள் மூவரும் வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பீனல் படேல் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ரூபல்பென் படேல், பக்டி படேல் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் வேறொரு நபருடன் தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என போலீசார் கூறினர். கடந்த ஞாயிற்றுகிழமை, 23 வயது அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் கொள்ளை கும்பலால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலால் இந்தியர்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!