SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் கடந்த 17 ஆண்டுகளில் துப்பாக்கி சூட்டில் 2793 பேர் படுகொலை

2023-01-25@ 17:56:43

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 17 ஆண்டுகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2793 பேர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தனிநபர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதற்காக கடுமையான சட்டங்கள் இல்லாததால், பலரும் தாராளமாக துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடும் அதிகமாக உள்ளது.

அதனால் துப்பாக்கிச் சூடு நடக்காத நாளே இல்லை என்ற அளவில் தினசரி உயிர் பலிகள் நடக்கின்றன. கடந்தாண்டை போலவே இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த ஆண்டின் ஜனவரியில் நேற்று வரை நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 39 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை (கிட்டத்தட்ட 17 ஆண்டுகள்) 2,793 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித் து சான் மேட்டியோ கவுண்டி மேற்பார்வையாளர்கள் வாரியத்தின் தலைவர் டேவ் பைன் கூறுகையில், ‘நவீன சமூகத்திற்கான வாழ்க்கை முறை அமெரிக்காவில் இல்லை. துப்பாக்கி உரிமத்திற்கான அனுமதியை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்