வந்தவாசி அரசு மருத்துவமனையில் 6 மாத கைக்குழந்தை உயிரிழப்பு: மருத்துவர்கள் சிகிச்சையளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக உறவினர்கள் புகார்
2023-01-25@ 11:26:01

திருவண்ணாமலை: வந்தவாசி அரசு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் 6 மாத கைக்குழந்தை இறந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். வந்தவாசியை சேர்ந்த இப்ராகிம் , சபீனா தம்பதியின் 6 மாத ஆண் குழந்தை முகமது அசுல் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 6 மணிக்கு குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி உள்ளது. இதனை பெற்றோர் எடுத்து கூறியும் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் செல் போனில் மூழ்கியபடி அலட்சியமாக இருந்ததால் சிறுது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டான்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து 6 மணி நேரம் தர்ணா போராட்ட ம் நடத்தினர். இதனை தொடர்ந்து திடிரென்று சாலை மறியலிலும் ஈடுப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஏழுமலை வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம் உள்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உறவினர்கள் சமாதானம் அடையவில்லை . இதனால், அரசு மருத்துவமனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்பு: கடலோர காவல் படை நடவடிக்கை
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!