துருக்கி அதிபரின் உருவ பொம்மையை தலைகீழாக தொங்க விட்டதால் பதற்றம்: குறிப்பிட்ட மத நூலை எரிக்க ஸ்வீடன் அனுமதி
2023-01-23@ 16:53:09

ஸ்டாக்ஹோம்: துருக்கி அதிபரின் உருவ பொம்மையை ஸ்வீடனில் தொங்கவிட்ட விவகாரத்தில் குறிப்பிட்ட மத நூலை எரிப்பதற்கு ஸ்வீடன் அரசு அனுமதி அளித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகம் அருகே, துருக்கி அதிபர் தையிப் எர்டோகனின் உருவ பொம்மையை சிலர் தலைகீழாக தொங்கவிட்டனர். கருத்து சுதந்திரம் குறித்து இருநாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிபரின் உருவ பொம்மையை தொங்கவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துருக்கியிலும் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வலதுசாரித் தலைவர் ராஸ்மஸ் பலுடான் (41) என்பவர், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே குறிப்பிட்ட மதத்தின் நூல் நகலை எரிப்பதற்கு, ஸ்வீடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம் உலகளவில் குறிப்பிட்ட மதத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஸ்வீடன் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து நோட்டோ உறுப்பு நாடுகளின் பட்டியலில் தங்களையும் சேர்க்க ஸ்வீடன் போராடி வருகிறது. இதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருநாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன’ என்று தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!