என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சி நடக்கிறது!: இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டு
2023-01-21@ 16:33:24

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் இருந்து என்னை விரட்டியடிக்க தீவிர முயற்சிகள் நடப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், இங்கிலாந்து நாட்டின் ‘தி நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பொதுத் தேர்தலுக்கு முன்னதாக என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதற்காக ஆளும் கூட்டணி அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக என் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதுபுது வழக்குகளை பதிது செய்து வருகின்றனர். இருப்பினும், என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற அவர்களால் எந்த வழக்கும் போட முடியவில்லை’ என்றார். முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு தோற்றதால், அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவர் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரிப்பு
போர் கப்பல் விரட்டியடிப்பு சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு.
இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு
தவறாக வழி நடத்திவிட்டேன் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
18 குழந்தைகள் பலி உபி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்து
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!