கனமழை எச்சரிக்கை!: செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறப்பு.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..!!
2022-12-09@ 12:52:04

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.
இந்த ஏரியில் இருந்து கடந்த காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 22 அடியில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாக உள்ளது. அந்த வகையில் தான் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்-முசிறி அருகே பரபரப்பு
கள்ளிக்குடி அருகே களப்பலி நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி துறையை சேர்ந்த பெண் தலைவர்கள், உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது கருப்பட்டி தயாரிக்கும் தொழிலுக்கு 50 சதவீதம் மானியம்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!