SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறுகிறது: இந்திய வானிலை மையம்

2022-12-08@ 18:31:39

டெல்லி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறுகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் சற்று நேரத்தில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து 390 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கும், புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுகுறைந்து புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்