விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை
2022-12-08@ 16:33:51

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எல்லை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (60), விவசாயி. மனைவி முத்தம்மாளுடன் (55) வசித்து வந்தார், நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு ஒரு பகுதியில் முத்தம்மாளும், மற்றொரு பகுதியில் வீராசாமியும் படுத்து தூங்கினர். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு அறையின் மேல் பகுதியில் இருந்த ஜன்னல் கம்பிகள் உடைத்து நீக்கப்பட்டு அதன் வழியே வந்த கொள்ளையர்கள் வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 பவுன் நகை மற்றும் ரூ.5.75 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து வீராசாமி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி