மாநிலங்கள் அவைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு வைகோ பாராட்டு
2022-12-08@ 11:52:01

டெல்லி: மாநிலங்கள் அவைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நாடாளுமன்றம் நேற்று கூடியது. மாநிலங்கள் அவைத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜக்தீப் தங்கரை பாராட்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவாதம் நடக்கும் போதெல்லாம், பெரிய கட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கற்களான மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி ஆகியவற்றைப் பாதுகாக்க சிறிய கட்சிகளுக்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இன்று மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிட்டது; சமூக நீதி கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இவற்றிற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? பெரும்பான்மையால் அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்துகளை, குறிப்பாக சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையை தகர்க்கக் கூடாது. அது நடந்தால், நாட்டின் எதிர்காலமும், நாட்டின் ஒருங்கிணைப்பும் கேள்விக்குறியாகிவிடும். நீங்கள் ஒரு சட்ட வல்லுநர், அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்ட நிபுணராக எத்தனையோ அரசு துறைகளைகளைக் கையாண்டிருக்கிறீர்கள். எனவே, உங்களிடமிருந்து நாங்கள் உரிய நீதியை எதிர்பார்க்கிறோம். இந்த அவையின் தலைவரான உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. இவ்வாறு வைகோ உரையாற்றினார்.
மேலும் செய்திகள்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!