பாஜவின் பெரும்பான்மையால் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: மம்தா குற்றச்சாட்டு
2022-12-08@ 00:03:38

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கும் முன்பாக, தனது கட்சி எம்பிக்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘மாநில உரிமைகளில் தலையிடக்கூடிய 16 மசோதாக்களை குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தாலும் தனது பெரும்பான்மை பலத்தால் ஒன்றிய அரசு வாக்கெடுப்பு எதுவும் நடத்தாமல் மசோதாக்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்றுகிறது.
நிலைக்குழு, தேர்வுக்குழு அறிக்கைகள் எதையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.இப்படியே போனால் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்து நிற்குமா, இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அதன் மதிப்பும், மரியாதையும் என்னவாகும் என நாங்கள் அஞ்சுகிறோம். நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு
ஆணையர் தலைமையில் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி திட்ட பணிகளுக்கு ₹273.12 கோடி நிதி ஒதுக்கீடு-மேயர் அமுதா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!