புது வகையான 3 சைபர் க்ரைம் குற்றம் குறித்து க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பொதுமக்கள் படிக்கலாம்: சென்னை மாநகர காவல்துறை தகவல்
2022-12-07@ 00:08:35

சென்னை: புது வகையான 3 சைபர் க்ரைம் குற்றங்கள் தடுப்பது குறித்த க்யூஆர் கோடு புத்தகத்தை பொதுமக்கள் செல்போன்களில் ஸ்கேன் செய்து படிக்கலாம் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றவாளிகள் உபயோகிக்கும் 30 குற்ற செயல் வழிமுறைகளை விக்கி ‘முத்துவும், 30 திருடர்களும்’ என்ற தலைப்பில் சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடந்த மாதம் வெளியிட்டார்.
சைபர் கிரிமினல்கள் அடிக்கடி தங்கள் யுக்திகளை மாற்றி புதுவகையில் மக்களை ஏமாற்றுபவர்கள் என்ற காரணத்தால் அதுகுறித்து தகவல்களை மக்களிடையே உடனுக்குடனே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் க்யூஆர் கோடு வடிவில் புத்தகத்தை சென்னை மாநகர காவல்துறை கொண்டு வந்துள்ளது. புத்தகம் வெளியிட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், தற்போது 3 சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.
* ஆன்லைன் ரம்மி வாயிலாக பண மோசடி.
* காவல் அதிகாரிகள் போல் பேசி மிரட்டி பணம் பறிக்கும் மோசடி.
* வங்கி கணக்கில் இருந்து பணம் தவறுதலாக டெபிட் ஆனதாக கூறி மோசடி.
இதுகுறித்த விளக்க படங்களுடன் குற்ற செயல்வகை முறைகள் தொகுக்கப்பட்டு, அதே க்யூஆர் கோடில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை செல்போனில் ஸ்கேன் செய்து படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில்
மெரினா கடற்கரையில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட விவகாரம்: வீடியோ பதிவு மூலம் 20 மாணவர்களை கைது செய்யும் பணி தொடங்கியது
இந்தியாவிலேயே அதிக மாசுப்பட்ட ஆறு கூவம்: ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குறித்து இன்று மாலை அறிவிப்பு
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!