புதர் மண்டி கிடக்கும் பொது கழிவறை: சீரமைக்க வலியுறுத்தல்
2022-12-06@ 19:06:23

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடபட்டி, நரசிங்கபுரத்தில் மாற்றுத்திறனாளி கழிவறைகள் உள்ளன. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கழிவறைகள் உள்ளே நுழையமுடியாத அளவு புதர் மண்டி கிடக்கிறது. கழிவறை சிதிலமைந்த நிலையில் உள்ளதுடன், தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் கழிவறையை பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் அருகில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி வளாகத்தை கழிவறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று சேடபட்டி நல்லமுத்துபிள்ளை தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிவறை செயல்படவில்லை. இதனால் திறந்தவெளியை கழிவறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துகின்றனர். அருகில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதியும் அசுத்தமடைகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் கழிவறையை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!