நாகர்கோவிலில் துணிகரம் வீட்டை உடைத்து 30பவுன் நகை, பணம் கொள்ளை
2022-12-06@ 12:53:14

நாகர்கோவில் : நாகர்கோவிலில் தொழிலதிபர் வீட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் ராமவர்மபுரம் விருந்தினர் மாளிகை எதிரே அப்சர்வேட்டரி தெரு உள்ளது. இங்கு ஓமன் நாட்டில் தொழில் செய்து வரும் யூஜின்தாஸ்(72) என்பவரின் வீடு உள்ளது. யூஜின்தாஸ் தனது மனைவி கமலாவுடன் சென்னையில் டாக்டராக பணியாற்றி வரும் தனது மகள் வீட்டிற்கு கடந்த சில நாட்கள் முன்பு சென்றுள்ளனர். 6ம் தேதி வருவதாக தனது உறவினர்களிடம் யூஜின்தாஸ் கூறி சென்றிருந்த நிலையில், நேற்று காலை யூஜின்தாசின் வீட்டின் காம்பௌன்ட் கேட் திறந்து கிடந்துள்ளது.
இதனைக் கண்ட அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து யூஜின்தாசிற்கும் நேசமணி நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உளி வைத்து செதுக்கி திறந்தது தெரிய வந்தது. வீட்டில் 3 மாடிகள் இருந்தாலும், படுக்கை அறையில் உள்ள பீரோவை உடைத்து, அதிலிருந்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. 30 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் வரை கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. யூஜின்தாஸ் வந்த பின்னர் தான் எவ்வளவு பணம் நகை கொள்ளை போனது என்பது தெரிய வரும். மேலும், தற்போது கொள்ளை அடித்த விதத்தை பார்க்கும் போது இது புது கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
தடயவியல் துறையினர் கை ரேகைகளை பதிவு செய்தனர். டிஎஸ்பி நவீன்குமார் வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை நடைபெற்ற வீட்டின் அருகில் உள்ள வீடுகள், வீட்டின் பின்பக்கம் உள்ள விவேகானந்தர் தெரு, கேபி சாலையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளை நடைபெற்ற தெருவில் பங்களாக்கள் மற்றும் வீடுகள் நெருக்கமாக உள்ள நிலையில், துணிச்சலாக நடைபெற்ற கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்பக்க கதவும் உடைப்பு
கொள்ளையடிக்க வந்தவர்கள் முதலில் வீட்டின் பின்பக்கம் உள்ள கதவை உடைத்து உள்ளே வந்துள்ளனர். ஆனால், அங்கு உள்அறையும் பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனால், முன்பக்கம் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்ததால், கதவை உடைக்கும் சத்தம் யாருக்கும்கேட்கவில்லை என அருகில் உள்ள வீட்டினர் தகவல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தகாத உறவை அம்பலப்படுத்திய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-பெரம்பலூர் அருகே பயங்கரம்
நள்ளிரவில் கண்முன்னே காதலனுடன் தனிமை கணவனை சரமாரி வெட்டி விட்டு போலீசில் சரணடைந்த மனைவி
குடிபோதையில் தகராறு 7 ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த 3 வாலிபர்கள் கைது
சவாரி அழைப்பது போல் நடித்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை
கத்தி முனையில் மிரட்டி வாலிபரிடம் நகை பறிப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!