குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சரிந்த ராட்சத பாறைகள்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
2022-12-06@ 00:40:15

குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல இடங்களில் ராட்சத பாறைகள் அகற்றப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது. மண் அகற்றியதால் மரங்களும் அந்தரத்தில் தொங்கியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு பெய்த கன மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்த கோபாலன் பாலம் பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது, அதிர்ஷ்டவசமாக அவ்வழியே வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திடீரென மீண்டும் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் மரங்கள் மற்றும் ராட்சத பாறைகள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதையில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்க துவங்கியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மூடப்பட்டு வாகனங்கள் கோத்தகிரி வழியாக மாற்றம் செய்யப்பட்டது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
அதிகாரிகள் பல முறை தொடர்பு கொண்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பதில் அளிக்கவில்லை. தங்களிடம் உள்ள அனைத்து வாகனங்களும் பழுதடைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். உடனடியாக வேறு வழியின்றி வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இணைந்து பாறைகளை கைகளால் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவிலான பாறைகள் அகற்றப்பட்டு மரங்களை அகற்றி ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:
Coonoor-Mettupalayam mountain pass giant rock falls 3 hours traffic affected குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை சரிந்த ராட்சத பாறைகள் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புமேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!