SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யும்: உயர் நீதிமன்றம் நம்பிக்கை

2022-12-06@ 00:10:27

சென்னை: சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அரசு முடிவு செய்தது. ஆனால், இதுவரை அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

எனவே, நிதி ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதற்கான திருத்திய திட்டம் மற்றும் மதிப்பீடு நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார். இதை பதிவு செய்து நீதிபதிகள், விரைவில் அரசு நிதி ஒதுக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்