மனைவியை பிரிந்து வந்தார் கள்ளக்காதலிகளும் ஓட்டம் லாரி டிரைவர் தற்கொலை
2022-12-05@ 03:51:22

புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவி மற்றும் கள்ளக்காதலிகள் விட்டு சென்றதால் விரக்தியடைந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி வில்லியனூர் கணுவாப்பேட்டை சாமியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் காண்டியப்பன் (40), லாரி டிரைவர். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.
குடிபழக்கமும், சில பெண்களுடன் தொடர்பு காரணமாக மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காண்டியப்பன் ஓராண்டுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து, வில்லியனூர் மூர்த்தி நகரில் வேறொரு பெண்ணுடன் வசித்துள்ளார். அதே வீட்டில் வாடகைக்கு இருந்த மற்றொரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் அவருடன் வசித்த பெண் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதேசமயம் காண்டியப்பனுடன் தொடர்பில் இருந்த பெண்ணும் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டார். தனிமையில் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்தது மின்சாரம் பாய்ந்து காட்டுயானை பலி
ரூ.7 லட்சத்தை பறிகொடுத்தார் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவமனை ஊழியர் தற்கொலை: திருச்சி அருகே சோகம்
அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்
தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்
தீர்ப்புகள் மொழி பெயர்ப்பில் சென்னை ஐகோர்ட் முதலிடம்: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி