நிலக்கல்-பம்பை இடையே பயணிக்க சபரிமலை ஆன்லைன் முன்பதிவின் போது பஸ் டிக்கெட் பெறும் வசதி: கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு ஐகோர்ட் உத்தரவு
2022-12-05@ 00:08:35

திருவனந்தபுரம்: சபரிமலை தரிசனத்திற்காக பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, நிலக்கல்-பம்பை இடையிலான பஸ் பயணத்திற்கான டிக்கெட் எடுக்க வசதி ஏற்படுத்த முடியுமா என்று விளக்கமளிக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த 10 வருடங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் பக்தர்கள் காலதாமதமின்றி உடனுக்குடன் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்திவிட்டு கேரளஅரசு பஸ்சில் பம்பைக்கு செல்ல வேண்டும். இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். பெரும் சிரமப்பட்டு பஸ்சில் பயணம் செய்த ஒரு பக்தர் கேரள உயர் நீதிமன்றத்திற்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், நிலக்கல்-பம்பை இடையே பஸ்சில் இருக்கை கிடைப்பது மிகவும் சிரமமாக இருப்பதால், தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதே இந்த பஸ்சில் டிக்கெட் எடுக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பக்தரின் இந்தக் கடிதத்தை நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. பக்தரின் கோரிக்கைக்கு ஏற்ப தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய் யும்போதே நிலக்கல்- பம்பை பஸ்சிலும் டிக்கெட் எடுக்க வசதி ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
நெய்யபிஷேகத்திற்கு பலமணி நேரம் காத்திருப்பு:
சபரிமலையில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் வரை 10 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களில் மட்டும் 2.10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. தரிசனத்திற்காக நேற்று காலை வரை 67 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
Tags:
சபரிமலை ஆன்லைன் முன்பதிவு பஸ் டிக்கெட் பெறும் வசதி கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு ஐகோர்ட் உத்தரவுமேலும் செய்திகள்
ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விளையாட்டுகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை : ஒன்றிய அரசு
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ராகுல்காந்திக்கு ஆதரவாக டெல்லியில் அமைதி பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது: பெண் நிர்வாகிகளிடம் போலீசார் அத்துமீறல்..!
அக்னிபாத் திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட வீரர்கள் அணிவகுப்பு: கடற்படைக்கு தேர்வு செய்யப்பட்ட 2600 அக்னி வீரர்கள் பங்கேற்பு
தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி யாருடைய கட்டளைப்படியும் செயல்படவில்லை
எந்தவகையில் அடிப்படை உரிமை மீறப்படுகிறது? முன்னாள் எம்பி முகமது பைசலுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!