மேட்டுப்பாளையம்-கோவை இடையே தினசரி ரயில் சேவை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்
2022-12-05@ 00:05:38

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-கோவை இடையே பயணிகள் ரயில் இனி வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த தினசரி ரயில் சேவையை நேற்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மெமு மின்சார பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஐந்து முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஐந்து முறையும் இயக்கப்பட்டு வந்தது. இதனை மேட்டுப்பாளையம், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோவைக்கு செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அது ஏற்கப்பட்டு இந்த தினசரி ரயில் சேவையின் துவக்க விழா நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரயில் சேவையை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மீன்பிடி துறைமுகத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில், சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் மீண்டும் நின்று செல்வதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், எம்பி கல்யாணசுந்தரம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், செங்கல்பட்டுக்கும், விழுப்புரத்துக்கு இடையே மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி