கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உடுமலையில் அகல்விளக்கு விற்பனை அமோகம்
2022-12-04@ 18:31:29

உடுமலை: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உடுமலையில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திருக்கார்த்திகை தீபத்திருநாள் நாளை மறுநாள் 6ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உடுமலை மத்திய பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மண் அகல் விளக்குகள் விற்பனைக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஒரு அகல் விளக்கு 1 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விருத்தாச்சலத்திலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த அகல்விளக்குகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். விளக்குகள் செய்ய தேவையான களிமண் கிடைப்பதில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை ஏற்றத்துடன் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!