ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திருப்பதி வருகை
2022-12-04@ 18:19:30

திருப்பதி: இந்திய குடியரசு தலைவர் திரவுபதிமுர்மு, ஆந்திர மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று மதியம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வருகிறார். அங்கு இந்திய கடற்படை தின விழாவில் பங்கேற்று கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்து பார்வையிடுகிறார். பின்னர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு கர்நூலில் சாலை விரிவாக்க பணியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் திருப்பதி புறப்படும் ஜனாதிபதி, இரவு 9.15 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். பின்னர் திருமலைக்கு சென்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை காலை 9.30 மணிக்கு ஆதிவராக சுவாமி மற்றும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து காலை 11.55 மணியளவில் பத்மாவதி பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கு மகளிர் குழுவினர் தயாரித்த பொருட்களை பார்வையிடுவதுடன் பேராசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து 12.50 மணிக்கு பத்மாவதி தாயார் கோயிலில் தரிசனம் செய்கிறார். அங்கிருந்து 1.40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று டெல்லி திரும்புகிறார்.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு
ஆணையர் தலைமையில் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி திட்ட பணிகளுக்கு ₹273.12 கோடி நிதி ஒதுக்கீடு-மேயர் அமுதா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!