அடுத்த ஆண்டு மார்ச்சில் பாட்னாவில் ஜி 20 மாநாடு
2022-12-04@ 01:15:20

பாட்னா: பீகாரில் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜி20 கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. ஜி20 தலைமை பொறுப்பை கடந்த ஒன்றாம் தேதி இந்தியா ஏற்றது. தொடர்ந்து ஓராண்டுக்கு இந்த தலைமை பதவியை இந்தியா வகிக்கும். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகின்றது. இதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் இணைந்து 200 ஜி20 கூட்டங்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பீகாரின் பாட்னாவில் அடுத்த ஆண்டு மார்ச் 6 மற்றும் 7ம் தேதியும் ஜி20 கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தற்போது தொடங்கி உள்ளது. கூட்டத்தில் வரவேற்பு நிகழ்ச்சி, பிரபல நாட்டுப்புற இசை,நடனம், அழிந்து வரும் கலைகள் உள்ளிட்டவை குறித்த நிகழ்ச்சிகள் இடம்பெறும். கூட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குறித்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்திய கலாசார கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநில கலை மற்றும் கலாச்சார துறை செயலாளர் பந்தனா பிரியாஷி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!