டெல்லி கலால் கொள்கை ஊழல் குறித்து தெலங்கானா முதல்வர் மகளுக்கு சிபிஐ சம்மன்: ஐதராபாத் வீட்டில் வரும் 6ம் தேதி விசாரணை
2022-12-04@ 01:10:44

ஐதராபாத்: டெல்லி அரசின் புதிய கலால் கொள்கை ஊழல் தொடர்பாக தெலங்கானா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியுமான கவிதாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த வழக்கில், தெலங்கானா முதல்வரின் மகளும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்தி ரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கவிதா கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில், கவிதாவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியது. அதில் வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு ஏதேனும் ஓர் விருப்பமான இடத்தில் நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இதற்கு தனது ஐதராபாத் இல்லத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக கவிதா தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய அளவில் பாஜவுக்கு எதிராக டிஆர்எஸ் கட்சியை வலுப்படுத்த முயலும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சமீபகாலமாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் அவரது மகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Delhi Excise Policy Corruption Telangana Chief Minister's Daughter CBI Summons Investigation at Hyderabad House 6th டெல்லி கலால் கொள்கை ஊழல் தெலங்கானா முதல்வர் மகள் சிபிஐ சம்மன் ஐதராபாத் வீட்டில் 6ம் தேதி விசாரணைமேலும் செய்திகள்
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு.!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்