அறிவுசார் மையம் அமைப்பதை எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
2022-12-02@ 00:28:57

சென்னை: மேட்டுப்பாளையத்தில் உயர்நிலை பள்ளி எதிரே அறிவுசார் மையம் அமைக்கப்படுவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சியில் 1.87 கோடி ரூபாய் செலவில் மாணவர்களுக்கு பயன்படக் கூடிய அளவில் அறிவுசார் மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த கட்டிடத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள மணி நகர் நகராட்சி உயர்நிலை பள்ளி எதிரே அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உயர்நிலை பள்ளி அருகே அறிவுசார் மையம் அமைப்பதற்கு பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வீரகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மாணவர்கள் படிப்பின் நலன் மற்றும் நீட் போன்ற போட்டி தேர்வில் தேர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அறிவுசார் மையம் அமைக்கப்படுகிறது. அதன் மூலம் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். இந்த மையத்தை சுற்றி மேல்நிலை பள்ளிகள் உள்ளன என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு மனுதாரருக்கு அபராதம் விதிக்க கூடிய வழக்காக உள்ளது. மாணவர்கள் படிப்பின் நலன் கருதி அறிவுசார் மையம் கட்டுவதை எதிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% கட்டணச் சலுகை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAIக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம்.!
தொல்லியல் துறை அனுமதி, மண்டலக்குழு அனுமதி, மாநிலக் குழு அனுமதி பெற்று 16 பணிகள் ரூ.5.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன: தமிழ்நாடு சட்டபேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மது அருந்தாதவரை மது அருந்தியதாக காட்டிய பிரீத் ஆனலைசர் மிஷின்: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!