SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரியல் எஸ்டேட்காரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் கைது

2022-12-02@ 00:27:57

திருச்சி:திருச்சி காட்டூர் பாப்பாகுறிச்சியை சேர்ந்தவர் அசோக்குமார்(44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், திருவெறும்பூர் அருகே பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்தார். அதற்கு சந்தை மதிப்பாக ரூ. 1 லட்சம் நிர்ணயம் செய்து பத்திர பதிவு செய்ய திருவெறும்பூர் சார்பதிவாளர் பாஸ்கரனை(56) அணுகியுள்ளார். அப்போது அவர், அந்த நிலத்தை விவசாய நிலமாக 47 (A) படி பத்திரம் பதிவு செய்ய தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி அசோக்குமார் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனையின் பேரில் சார் பதிவாளர் பாஸ்கரனிடம், ரூ.1 லட்சத்தை நேற்று அசோக்குமார் லஞ்சமாக கொடுத்தார் அப்போது மறைத்திருந்த போலீசார் சார்பதிவாளர் பாஸ்கரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்