கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் தீக்குளிக்க முயற்சி: போலீசார் குவிப்பு
2022-12-01@ 19:09:21

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மணி நகரில் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களுடன், அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றத்தை தடுக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மணி நகரம் உச்சி செட்டி தெருவில் சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோயில் இடையூறாக உள்ளது என தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோயிலை இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் கோயிலை அகற்றுவதற்கு இன்று காலை அங்கு வந்தனர். இதற்கு அப்பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை ஏஎஸ்பி தருண் ஹாரட், திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன், திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், டவுன் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கிரேஷ் சோபியா பாய் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர், திடீரென கோயில் அருகே உள்ள கட்டிடத்தில் ஏறி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மேலும் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்களும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து கோயிலை அகற்றுவது தொடர்பாக அப்பகுதிமக்களிடம், அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!