SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கக் கூடாது: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்..!

2022-12-01@ 15:00:45

டெல்லி: விமான போக்குவரத்து கருவிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் அக்.1ம் தேதி அறிமுகமான 5ஜி சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நாடு முழுவதும் இதனை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்க கூடாது என தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய தொலை தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விமான போக்குவரத்துக்கான மின்னணு கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்து 2.1 கி.மீ.க்கு அப்பால் மட்டுமே கோபுரங்களை அமைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்