குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 4.92% வாக்குகள் பதிவு
2022-12-01@ 11:05:04

காந்திநகர்: குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 4.92% வாக்குகள் பதிவாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்கு பதிவு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. குஜராத் அருகே உள்ள வத்வான் கிராமத்தில் காலையில் தொடங்கிய வாக்கு பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
மக்கள் நீண்ட வரிசையில் இருந்து தங்களது வாக்கை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் அடையாள அட்டையை காண்பித்ததற்கு பின் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சுந்திரநகர் ராஜ்போட்டில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது. 89 சட்டசபை தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் 9 மணியளவில் 4.92% வாக்கு பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 89 சட்டசபை தொகுதிகளிலும் 718 ஆண் வேட்பாளர்களும், 70 பெண் வேட்பாளர்களும் இருக்கின்றனர். 18 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 5 லட்சம் பேர் மற்றும் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் 49 லட்சம் பேர் 30 முதல் 40 வயது வரை 65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
89 சட்ட பேரவை தொகுதிகளில் சுமார் 25,430 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. குஜராத் சட்ட பேரவையை பொறுத்தவரை 182 சட்ட பேரவை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவானது தற்போது தொடங்கியுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி இன்று 3.30 மணியளவில் அகமதாபாத்தில் 2 கட்ட வாக்கு பதிவு நடைபெற கூடிய இடங்களில் பேரணியில் பிரதமர் பங்கேற்கிறார். 2-ம் கட்ட வாக்குப்பத்தி டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற இருக்கிறது.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்