தறிபட்டறை தொழிலாளி கொலை: 4 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள்
2022-12-01@ 00:45:13

ஈரோடு: தறிபட்டறை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகர் 8வது வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (25). தறிபட்டறை தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செல்வகுமாரின் பெரியப்பா மகன் மணிகண்டன் அதே பகுதியில் அவரது மனைவி லட்சுமியுடன் (27) வசித்து வருகிறார். மணிகண்டனுக்கும், லட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2018 ஆகஸ்ட் 9ம் தேதி படுகொலை செய்யப்ட்டார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி உட்பட 8 பேரை கைது செய்தனர். இதில் கண்ணையன் இறந்துவிட்டார். இந்த வழக்கை ஈரோடு முதலாவது ஜூடிசியல் கோர்ட் நீதிபதி மாலதி விசாரித்து, ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி