SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி ஆதாரில் பயணித்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மீது வழக்கு: முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் முறையீடு

2022-11-30@ 18:45:48

கான்பூர்: போலி ஆதார் அடையாள அட்டையை காட்டி ெடல்லியில் இருந்து மும்பை சென்ற சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கி பயணம் செய்தார். அவர், போலி ஆதார் அடையாள அட்டையை சமர்பித்து  பயணம் செய்ததாக கூறி, கோவல்தாலி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு  செய்துள்ளன். அவர் சமர்பித்த ஆதார் அட்டையில் அஷ்ரப் அலி என்பவரின் பெயரும், இர்ஃபான் சோலங்கியின் புகைப்படமும் இருந்தது.

அதனால் அவர் மீது  ஐபிசி 212, 419, 420, 467, 468, 471 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டதாகவும், தற்போது அவரை கைது செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிபி ஜோக்தாண்ட் கூறினார். இதற்கிடையே இர்ஃபான் சோலங்கியின் வழக்கறிஞர், கான்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு  தாக்கல் செய்துள்ளார்; இம்மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்