தீவிரவாத தொடர்பு குறித்து 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
2022-11-30@ 00:54:54

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கும், உள்ளூர் ரவுடி கும்பலுக்கும் இடையேயான தொடர்பு குறுித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) டெல்லி உட்பட 5 மாநிலங்களில் 13 இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தியது. பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை தொடர்பாக விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், சர்வதேச தீவிரவாத கும்பலுக்கும், உள்நாட்டில் குற்றங்கள் செய்து விட்டு வெளிநாடு தப்பிய சில தாதாக்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அத்தகைய நபர்கள் மூலமாக தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் ஆயுத கடத்தல் மற்றும் கொலை குற்றங்களை நிகழ்த்தியது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தீவிரவாதிகளுக்கும், உள்ளூர் ரவுடிகளுக்கும் இடையேயான தொடர்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் டெல்லி, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மற்றும் சண்டிகரில் நேற்று 13 இடங்களில் சோதனை நடத்தினர். இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தீவிரவாதிகளுக்கும் ரவுடி கும்பல், போதை மருந்து கடத்துபவர்கள், ஆள்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இன்றைய சோதனை நடத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
மேலும் செய்திகள்
ராகுலுக்கு அரசு பெரிய மனதை காட்டியிருக்க வேண்டும்
எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு தடைபெறாதது ஏன்?: பாஜ கேள்வி
2 ஆண்டு சிறை… எம்பி பதவி பறிப்பு என்னவாகும் ராகுலின் அரசியல் எதிர்காலம்?: 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்
பிறந்த நாளில் உருக்கம் நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் காதல் கடிதம்
ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய ஊழல் சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி ஆஜர்: சகோதரியிடமும் விசாரணை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி