திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்களுக்கு பாவு நூல் வினியோகம் நிறுத்தம் துவங்கியது: 5 லட்சம் பேர் வேலை இழப்பு
2022-11-29@ 17:17:20

பல்லடம்: திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்களுக்கு நேற்று முதல் பாவு, நூல் விநியோகம் செய்வதை ஜவுளி உற்பத்தியாளர்கள் நிறுத்தினர். சீரற்ற பஞ்சு விலை காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கொள்முதலை இழந்து கொண்டிருக்கின்றனர். நிலையற்ற நூல் விலை காரணமாக துணியின் விலையை நிர்ணயம் செய்ய முடியாத காரணத்தினால் துணி வர்த்தகம் நடைபெறாமல் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பல கோடி மதிப்புள்ள துணி தேக்கமடைந்துள்ளது.
மேலும் தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் மற்றும் போட்டி சந்தை மாநிலங்களை விட உயர்வாக உள்ள காரணத்தினால் துணி விலை அடக்கம் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த துணிகளை வாங்க வர்த்தகர்கள் யாரும் முன் வரவில்லை. எனவே நேற்று முதல் இரண்டு வாரத்துக்கு முற்றிலுமாக விசைத்தறியாளர்களுக்கு பாவு, நூல் விநியோகத்தை நிறுத்தி ஜவுளி உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதனால் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பாவு நூல் விநியோகம் நிறுத்தம் செய்வதின் மூலம் இரண்டு வாரத்தில் மொத்தம் ரூ.1400 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!