இந்திய எல்லையில் பறந்த பாக். ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
2022-11-29@ 15:53:41

அமிர்தசரஸ்: இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அடுத்த சாஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தியது. அந்த ட்ரோனில் வெள்ளை பாலிதீனில் சந்தேகிக்கப்படும் பொருளும் கட்டப்பட்டிருந்தது. அதனை மீட்ட பாதுகாப்பு படையினர், அதிலுள்ள பொருட்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் உள்ள கரன்பூர் இந்திய எல்லைப் பகுதியில், பாகிஸ்தானின் இருந்து ஊடுருவிய சப்தர் ஹுசைன் (39) என்பவனை, பாதுகாப்பு படையினர் இடுப்புக்குக் கீழே சுட்டு கைது செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமிர்தசரஸ் செக்டர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தனர். கடந்த ஆண்டு 97 ட்ரோன்கள் ஊடுருவிய நிலையில், இந்த ஆண்டு ஜூலை வரை மொத்தம் 107 ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு
ஆணையர் தலைமையில் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி திட்ட பணிகளுக்கு ₹273.12 கோடி நிதி ஒதுக்கீடு-மேயர் அமுதா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!