மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் சிறையிலடைப்பு
2022-11-29@ 14:48:08

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தலைச்சங்காடு கரைமேட்டில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 104 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக சாமுவேல் செல்லதுரை(54) பணியாற்றி வருகிறார். இங்கு பயிலும் 8ம் வகுப்பு மாணவிகள் 4 பேருக்கு தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், சீர்காழி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்தனர். பின்னர் நேற்றுமாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி