SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

60வது மலர் கண்காட்சி பணி பிரையண்ட் பூங்காவில் ஆரம்பிச்சாச்சு: முதற்கட்டமாக 1 லட்சம் மலர் நாற்றுகள் நட இலக்கு

2022-11-29@ 14:15:51

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை 60வது மலர் கண்காட்சிக்கு தயார்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 1 லட்சம் மலர் நாற்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2023ம் ஆண்டு மே மாதம் 60வது மலர் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் முதற்கட்ட மலர் நாற்று நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது.

மொத்தம் 1,200 மலர் படுகைகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வகைகளை சேர்ந்த ஒரு லட்சம் மலர் நாற்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சால்வியா, டெல்பீனியம், பிங்க் ஆஸ்டர், வெள்ளை ஆஸ்டர், ஆர் நித்தோகேலம், பெல் பெர்சியா, லில்லியம், டேலியா போன்ற மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கொடைக்கானல் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பெருமாள் சாமி, பூங்கா மேலாளர் சிவபாலன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்