திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் 500 குழந்தைகளுக்கு சிற்றுண்டி
2022-11-29@ 14:12:55

திருவள்ளூர்: திமுக இளைஞரணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்படி, திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா ஆதரவற்ற குழந்தைகள் 500 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் சே.பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார், ஒன்றிய அவை தலைவர் க.ஜெயராமன், துணை செயலாளர்கள் ஞா.ரமேஷ், மு.ராஜா, மகேஸ்வரி பாலவிநாயகம், ஒன்றிய பொருளாளர் குட்டி (எ) பக்தவச்சலு, மாவட்ட பிரதிநிதிகள் இ.என்.சேகர், ஆர்.திலீப்ராஜ், ப.இம்மானுவேல் முன்னிலை வகித்தனர். இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சேவாலயா ஆதரவற்ற குழந்தைகள் 500 பேருக்கு காலை உணவு வழங்கினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் பொன்.விமல்வர்ஷன், வழக்கறிஞர் ஆர்.எஸ்.ராஜராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் வ.ஹரி, ஆர்.ராஜி, மோத்தீஷ் மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
கூட்டணி குறித்து கேட்காதீங்க... அது மேலிடம் பார்த்துக்கும்... அண்ணாமலை கப்சிப்
இபிஎஸ், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்: சசிகலா பேட்டி
ராகுல் பதவி பறிப்பு அராஜக நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கண்டனம்
நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்
சட்டம் தனக்கு பொருந்தாது என நினைப்பவர்தான் ராகுல்
30 நாள் காத்திருக்குமா தேர்தல் ஆணையம்?
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி