ஆந்திர முதல்வர் சகோதரி திடீர் கைது
2022-11-29@ 00:12:43

திருமலை: தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி, ஆளும் டிஆர்எஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சகோதரியும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பிரஜா பிரஸ்தானம் (மக்கள் கேள்வி) என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரது பாதயாத்திரை நர்சம்பேட்டையில் 223வது நாளாக நேற்று மதியம் நடைபெற்றது. ஹனுமகொண்டா மாவட்டம் சங்கரந்தண்டாவில் ஷர்மிளாவின் நடைப்பயணத்தை டிஆர்எஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர் பயன்படுத்தி வந்த பேருந்தை எரித்தனர். மேலும், ஷர்மிளா பாதயாத்திரைக்காக வந்த வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசினர். ஷர்மிளாவுக்காக வைக்கப்பட்ட பேனர்களை டிஆர்எஸ் கட்சியினர் கிழித்து எறிந்தனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் திடீரென போலீசார் ஷர்மிளாவை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
புதிதாக 1249 பேருக்கு கொரோனா
ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி