அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி
2022-11-29@ 00:12:04

ஹூஸ்டன்: அமெரிக்காவில் உள்ள ஏரியில் மூழ்கிய தெலங்கானாவை சேர்ந்த 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானாவை சேர்ந்த உதேஜ் குந்தா(25) மற்றும் சிவா கெல்லிகாரி(25) ஆகியோர் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வந்தனர். இருவரும் வார விடுமுறையை கழிப்பதற்காக அங்குள்ள ஓசர்க்ஸ் ஏரிக்கு சனிக்கிழமை சென்றுள்ளனர். இதில் உதேஜ் ஏரியில் இறங்கி நீச்சல் அடித்துள்ளார். அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை என தெரிகிறது. எனவே அவரை காப்பாற்றுவதற்காக கெல்லிகாரி ஏரியில் குதித்துள்ளார். ஆனால் இருவராலும் கரைக்கு திரும்ப முடியாமல் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருவரது சடலங்களையும் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மீட்டனர். இறந்த மாணவர்களின் உடலை விரைவில் கொண்டு வருவதற்கு உதவுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Tags:
2 Indian students die after drowning in US lake அமெரிக்கா ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலிமேலும் செய்திகள்
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி