சுவாமியே..சரணம் ஐயப்பா!: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் ரூ.52 கோடி வருமானம்..தேவசம் போர்ட் அறிவிப்பு..!!
2022-11-28@ 10:05:50

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் 52 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவில், கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்திருந்த நிலையில், நடப்பாண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சன்னிதானம் செல்லும் 4 பாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் முன்பதிவு திறம்பட செயல்படுத்தப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி சபரிமலை வந்து செல்கின்றனர்.
இதனால் கடந்த ஆண்டு இதே நாளில் 9 கோடியே 92 லட்சம் ரூபாயாக இருந்த கோவிலின் வருமானம், நடப்பாண்டு நடை திறந்தபின் இதுவரை 52 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் அரவணை விற்பனைகள் மட்டும் 23 கோடியே 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம்: அடுத்தாண்டு மக்களவை தேர்தலால் கூடுதல் நிதி ஒதுக்கீடு
எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்
திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி