உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்புக்கு தகுதியானவர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2022-11-28@ 01:24:15

சென்னை: வளர்ந்த தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால் அமைச்சர் பொறுப்புக்கு எல்லா தகுதியும் உடையவர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாபேட்டையில் மெகா மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. சென்னை தெற்கு மாவட்டத்தில் அடுத்த 10 நாட்கள் 300 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இளைஞர் அணி செயலாளரை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க அனைத்து தகுதிகளும் உள்ளது.
இளைஞரணி செயலாளர் என்பது துணை அமைப்பாக இருந்தாலும், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அடித்தளம் வலுவாக இருப்பதற்கு ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கி உள்ளார். இந்தியாவில் மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் எல்லாக் கட்சிகளும் தொடங்குகிறபோதே இளைஞரணி என்பதை சம்பிரதாயத்திற்காக தொடங்குவார்கள். ஆனால் திமுகவில் இளைஞர் அணி அமைப்பு சம்பிரதாயத்திற்கான அமைப்பு அல்ல. சமூகத்திற்காக உழைக்கின்ற அமைப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!