திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மெகா திரி தயாரிக்கும் பணி
2022-11-27@ 13:56:56

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோயிலில் திருக்கார்த்திகை தீபதிருநாளையொட்டி வருகிற 6ம் தேதி தீபம் ஏற்றுவதற்காக பருத்தி துணிகளைக் கொண்டு திரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருநாளன்று உச்சிபிள்ளையார் கோயில் முன் மெகா திரியை கொண்டு தீபம் ஏற்றுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 6ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு செவ்வந்தி விநாயகர், தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார்குழலம்ைம உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் மாலை 6 மணிக்கு உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன் உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணிகளை கொண்டு 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக திரி தயாரிக்கும் பணிகள் மலைக்கோட்டை கோயிலில் உள்ள தாயுமானவர் சன்னதியில் நேற்று துவங்கியது.
பெரிய அளவிலான காடா துணியில் திரி நூல்களைக் கொண்டு திரி தயாரிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த திரியின் உள்ளே பருத்தி கொட்டை வைக்கப்பட்டு 2 மூட்டைகளாக சுற்றி கட்டி, அதனை மலைக்கோட்டையின் உச்சிபிள்ளையார் சன்னதியில் அமைந்துள்ள விளக்கு ஏற்றும் கோபுரத்தில் திரியை வைப்பார்கள்.
அதன்பின், அதில் நெய், இலுப்பை எண்ணெய் மற்றும் நல்லெண்ணை ஊற்றி கார்த்திகை தீபம் ஏற்றும் நாள் வரை எண்ணெயில் ஊற வைக்கப்படும். பின்னர் முதல் நாள் 15 டின் எண்ணெய் ஊற்றப்பட்டு, பின்னர் ஒவ்வொரு நாள் இடைவெளியில் என மொத்தம் 50 முதல் 70 டின் எண்ணை ஊற்றப்பட உள்ளது. வரும் 6ம் தேதி மாலை 6 மணி அளவில் மெகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ் செய்து வருகிறார்.
மேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்