முகநூல் மூலம் பழகி ரூ.பல லட்சம் மோசடி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
2022-11-27@ 12:13:48

மதுரை: முகநூல் மூலம் பழகி பல லட்சம் மோசடி செய்த வழக்கை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன் என்பவர், ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினார்.
இதன்படி எனது ஓய்வூதிய பணம் மற்றும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரின் பணம் ரூ.14.35 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். இதன்பிறகு அவரது செல்போன் எண், முகநூல் கணக்கு முடக்கப்பட்டது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தேன். என் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என் புகாரை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி சத்திகுமார் சுகுமாரா குரூப் விசாரித்தார். அரசு தரப்பில், மனுதாரர் புகாரின் மீது பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விசாரித்தார். தற்போது மனுதாரர் சைபர் க்ரைம் போலீசில் ஆஜராகுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு அல்லது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய திருச்சி எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கை உரிய பிரிவினர் விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்தது மின்சாரம் பாய்ந்து காட்டுயானை பலி
ரூ.7 லட்சத்தை பறிகொடுத்தார் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவமனை ஊழியர் தற்கொலை: திருச்சி அருகே சோகம்
அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்
தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்
தீர்ப்புகள் மொழி பெயர்ப்பில் சென்னை ஐகோர்ட் முதலிடம்: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி