மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் சேவையுடன் அடுத்தடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு, சேவை தொடக்கம்; உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2022-11-27@ 00:25:50

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில், பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை முன்னரே அறிவிக்கும் வசதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, மாநகர போக்குவரத்து கழகத்தின் 150 பேருந்துகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், அடுத்து வரும் நிறுத்தங்களை தெரிந்துகொள்ள வசதியாக 300 மீட்டர் தூரத்திற்கு முன், நிறுத்தங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யும் வகையில் போக்குவரத்து துறை இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, பேருந்துகளின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் தலா 2 என 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளின் இடையே விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு போக்குவரத்து கழகத்திற்கு அதன் மூலம் வருவாய் திரட்டப்படும் எனவும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவையை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ., பல்லவன் இல்லத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை பேருந்தில் பயணம் செய்தார்.
மேலும் செய்திகள்
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்: அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி
2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!