தமிழகம் முழுவதும் நடக்கிறது 2ம் நிலை காவலர்களுக்கு இன்று எழுத்து தேர்வு
2022-11-27@ 00:25:40

சென்னை: இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது. அதன்படி, ஆயுதப்படை காவலர்கள், 1,091 தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், 161 இரண்டாம் நிலை சிறை காவலர்கள், 120 தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கு, 2,99,887 ஆண்களும், 66, 811 பெண்களும், 59 திருநங்கைகளும் என மொத்தம் 3 லட்சத்து 66 ,727 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகத்தின் 35 நகரங்களில் உள்ள 295 மாவட்ட மையங்களில் இன்று நடைபெறுகிறது. எழுத்து தேர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி சீட்டு ஏற்கனவே நவம்பர் 15ம் தேதி வெளியானது.
இந்த தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் ஆணையர்கள் ஆகியோர் துணைக்குழு தலைவர்களாகவும், ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் நுழைவுச்சீட்டு, எழுது அட்டை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை, புகைப்படம் ஒட்டப்பட நுழைவுச்சீட்டுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரம் காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற உள்ளது. சென்னையில் நியூ கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 16 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
மேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி