பிரதமர் சுனக் முடிவால் இங்கிலாந்தில் படிக்க செல்வது கடினம்: புலம்பெயர்வதை தடுக்க நடவடிக்கை
2022-11-27@ 00:04:47

புதுடெல்லி: இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் புலம் பெயர்ந்தோர் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதில் கடந்த 2021ம் ஆண்டு 1.73 லட்சமாக இருந்த புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு 5.04 லட்சமாக உயர்ந்துள்ளது. சுமார் 3.31 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.
குறிப்பாக சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை உயர்வே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வௌிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை குறைப்பது உட்பட அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளாதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குறைந்த தரம் பட்டம் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களை அழைத்து வருவதை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களில், உயர்நிலை பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்கள் சேர்க்கையை கட்டுப்படுத்துவதும், மாணவர்களை சார்ந்தவர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்துவதும் அடங்கும். அதே நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களில் நிதியுதவி வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!