ரயில்வே தரைப்பாலங்களில் தண்ணீர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம்
2022-11-26@ 18:38:12

விருதுநகர்: விருதுநகர் வழியாக செல்லும் செங்கோட்டை ரயில்தடம், நெல்லை வழித்தடம், மானாமதுரை ரயில் தடங்களில் உள்ள ரயில்வே தரைப்பாலங்கள் அனைத்திலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். விருதுநகரை ஒட்டிய கூரைக்குண்டு ரயில்வே தரைப்பாலம், பேராலி ரயில்வே தரைப்பாலம், நாகம்பட்டி ரயில்வே தரைப்பாலம், பாலவனத்தம்-கோவிலாங்குளம் ரயில்வே தரைப்பாலம், மீசலூர் ரயில்வே தரைப்பாலங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
கிராமங்களுக்கு செல்லும் பஸ் சேவை, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவரும் மழைநீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை இல்லை. தாதம்பட்டியில் இருந்து மீசலூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாய நிலங்களுக்கும், கிராமத்திற்கும் மக்கள் சென்று வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மேலும் ரயில் தரைப்பாலங்களுக்கு அருகில் கண்மாய், கிணறுகள் இருப்பதால் அவற்றில் இருந்தும் ரயில்வே பாலங்களில் ஊற்று எடுக்கும் நிலையும் தொடர்கிறது. ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ரயில்வே தரைப்பாலங்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மோட்டார் பொருத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!